இறால் பிரியாணி செய்வது எப்படி?

 இறால் பிரியாணி



என்னதான் மட்டன் சிக்கன் பீப் என்று ருசித்து உண்டாலும் கடலுணவுகளில் இருக்கும் சுவை அலாதியே..


இன்றைய பதிவில் நாம் ருசிக்கப்போவது கடலுணவில் எல்லோருக்கும் பிடித்த இறாலை பிரதானமாக கொண்டு செய்யும் இறால் பிரியாணி எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.



அரிசி - 2 கப்

இறால் -2 ½ கப்

தக்காளி - 4 கப்

வெங்காயம் - 3 கப்

மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது -2 மேசைக்கரண்டி

புதினா- 2 கொத்து

நெய் - 1/4 கப்

கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி

சீரக தூள் - அரை மேசைக்கரண்டி

சோம்பு தூள் (பெருஞ்சீரகம்) - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - அரை கப்

பட்டை - 1

கிராம்பு -2

ஏலக்காய் -2

தேங்காய் துருவல் - 2 கப்

லெமன் மஞ்சள் பவுடர் - ஒரு சிட்டிகை(விரல் நுணியிணால் கிள்ளி போடுதல்)

உப்பு -2 1/2 தேக்கரண்டி


செய்முறை : 

1. அரிசியை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.  அத்தோடு குக்கரில் இட்டு சோறு/சாதம் (Cooking Rice) வடித்து வைக்கவும்.  மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.


2. இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை மிளகாயை கீறிவைத்துக்கொள்ளவும். தேங்காயை பிழிந்து தண்ணீர் சேர்த்து பால் எடுத்து கொள்ளவும்.



3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு,ஏலக்காய்,போட்டு 30 நொடிகள் வதக்கி விட்டு வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.


4. அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு எல்லாவற்றையும் 5 நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை வதக்கி விட்டு நெய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 


அதனுடன் குறிப்பிட்ட எல்லா தூள் வகைகளையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.


5. இறால்,கொத்தமல்லி தழைச உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும். கப் பால் ஊற்றி கிளறிவிட்டு தட்டை மூடி கொதிக்க விடவும். வடித்து வைத்திருக்கும்  சோற்றை /சாதத்தை

போட்டு கிளற தட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து 10 நிமிடம் தம்மில் வைக்கவும்..



6. நேரம் கழிந்த பின் இறக்கி வைத்து மேலே நெய் ஊற்றி கிளறி விடவும்... சுவையான இறால் பிரியாணி பரிமாறத்தயார். ஒரு சாதாரண குடும்பத்தினருக்கு (4-6 )இந்த அளவிடை போதுமானது...



Comments

Post a Comment